முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அகத்திணைப் பாடல்கள்வழி அன்றைய வாழ்வியல் கூறுகள்

முன்னுரை :  'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு' என்று கூறும் நாமக்கல் கவிஞர் வரிகளில் உள்ள உண்மைத் தன்மை அகிலத்தோரால் போற்றப்படுகிறது. இதனையே தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. சிற்பம், கட்டிடக்கலை, போர், இசை, கனிமவளம், மருத்துவம் என அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவன் தமிழன். அதற்குமட்டுமல்ல பலமணம் செய்து கொண்டு திருமணம் என்று அவ்வுறவைக் கொச்சைப் படுத்தும் மனிதர்களுக்கிடையே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னத கோட்பாட்டோடு வாழ்ந்து குடும்ப வாழ்வியலுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான் அதனையே சங்க இலக்கிய நூல்களும் இயம்புகின்றன. இல்லற வாழ்வியலை அகத்திணை என்று பெயரிட்டு அதற்கென இலக்கணங்களையும் வகுத்துள்ளான். அதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  அகத்திணை : நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையே சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியங்கள் அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டு வகையாக வகுத்துள்ளது. இதில் புறவாழ்வு என்பது தலைவன் மேற்கொள்ளும் போர் சிறப்பு பற்றியதாகும். ஆனால் அகவாழ்வு என்பது ஓர் ஆணும் பெண்ணும் கண்களால் காதல
சமீபத்திய இடுகைகள்

அகத்திணைப் பாடல்களுக்கென தனிச் சிறப்புகள், கூறுகள்

அ கத்திணை என்பது தமிழ் இலக்கியங்களிலேயே உயரிய பிரிவாகும். அக ஒழுக்கத்தைப் பற்றி விவரிக்கக்கூடியது அகத்திணையியலாகும். அகம் என்பதற்கு உள்ளம், உறவு, மறைவு என்ற பொருள்படும். நம் சங்கக் கால தமிழிலக்கியங்களில் காணப்படும் காதல் வாழ்வு, உலக மக்கட்கெல்லாம் உரிய காதல் நெறியாகும். அகத்திணைக்கல்வி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்க வேண்டிய இன்றியமையாக் கல்வியாகும். தலைமக்கள் இருவர் தாமே எதிர்கொண்டு,காதல் கொண்டு பெறும் இன்பம், பிறருக்கு இன்னதென்று உணர்த்த முடியாததும் தாமே உணர்ந்து கொள்ளக்கூடியதும் அகமாகும். சங்க காலங்களில் நம் முன்னோர்கள் இல்லறவு வாழ்வு பூசலின்றி வாழ்ந்தனர் என்பதனை நம் அகத்திணைப் பாடல்களில் அறியலாம். அகத்திணை,புறத்திணைஎன பல ஒற்றுமை வேற்றுமைகள் கொண்டிருந்தாலும் புறத்திணையைக் காட்டிலும் அகத்திணை சிறபம்சங்கள் கொண்டதாக கருதப்படுவதாகநன்கு தெளிவாக விளங்குகிறது. புறத்திணைப் பாடல் அமைப்புகள் வீரம் மக்களுள் சிலருக்கே உரியதாகப் புலப்படுகிறது. “நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே”- [புறம்.312] அகத்திணைப் பாடல் பொருள் காமமோ காதலோ ஆண் பெண் என்ற பிரிவினைக் கொண்டே அஃறிணை உயர்திணை உயிர்க்கெல்லாம

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் முப்பத்திரண்டு

திருவேந்தன் பதிவு #1 : தமிழ் வளர்ச்சிப் போக்கில் தவறான செயற்பாடுகள்.

உலக மொழிகள் அனைத்துமே எவ்விதத்திலும் தாழ்ந்தது உயர்ந்தது என இல்லை என்பதே மொழியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். எந்த மொழிகளில் உலகச் செய்திகள் தன் சமுதாயத்தினரிடம் கொண்டு செல்ல வல்லமை கொண்டுள்ளதோ அதுவே அவர்கள் பேசும் உயர்ந்த மொழியாகும். மொழியியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மொழியில் அமைந்துள்ள அட்டவணைக்குமேல் அந்த மொழிக்கு எழுத்துகள் தேவைபடுவதில்லை. ஒவ்வொரு மொழியும் தனக்கு தேவையான எழுத்து அட்டவணையினைப் பெற்றுள்ளது. அதற்கேற்றார்போல் ஆங்கிலமும் 26 எழுத்துகளுக்குமேல் ஓரெழுத்தைக்கூட தன் அட்டவணையில் சேர்க்கவோ நீக்கவோ அனுமதிப்பதில்லை என்றால் மிகையாகாது. மேலும், தேவநகரி எழுத்தில் எ. ஒ என்ற எழுத்து இல்லையென அந்த எழுத்தமைப்பை பயன்படுத்தும் மொழியினர் கவலைபட்டதில்லை.  காலத்திற்கேற்றார்போல் எல்லா மொழிகளும் பிரமொழியில் உள்ளப் பெயர்ச்சொற்களைத் தங்கள் மொழிகேற்ற ஒலிப்பு முறையில் அமைத்துக் கொள்கின்றன.  உதாரணம் :  பழனி > என்ற பெயரில் பதிவு செய்வதில் ‘ழ’ ஆங்கிலத்தில் இல்லை என ஆங்கிலேயர்கள் கவலைபட்டதில்லை.  இவ்வாறு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அனைத்து மொழிகளும் தங்களுக்கேற்றார் போல் கலைச்சொற்களை உர
Dear Teachers, குலனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குண மினையவும் அமைபவ னூலுரை யாசிரி யன்னே. இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். Happy Teacher's Day to all Teachers. Thanks for inspiring hope in me; Igniting my imagination; And instilling in me - a love of learning. We will always be thankful to you for all the hard work and efforts you have put in, for educating us. Happy Teacher's Day, stay well.

சிரம்பான் 2 குடியிருப்பு பகுதியில் தீ

சிரம்பான்-20-பிப்ரவரி. சிரம்பான் 2 குடியிருப்பு பகுதியில் தீ கடந்த இரண்டு மாதமாக சிரம்பானில் கடும் வெப்பத்தில் தள்ளப்பட்டது. தட்ப வெப்பநிலை மாற்றத்தனால், மழையே இல்லாம போனது. இச்சம்பவம் தொடர்ந்து இன்று சிரம்பான் 2 குடியிருப்பு பகுதியில் வெப்பத்தின் காரணமாக தானாகவே சிறு காடு பகுதியில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இங்கு வாழும் குடியிருப்புவாசிகள் உடனே தீயணைப்பு வீரர்களுக்கு செய்தி வழங்கி, தீயை அணைக்க முயன்றனர். கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாம் முறையாகும். இங்கு வாழும் குடியிருப்புவாசிகள் பயந்த ஒரே காரணம் தீ ஏற்பட்ட பகுதியில் மின்சாரக்கூடம் உள்ளது. பற்றி எரிந்த தீ அக்கூடத்தை தாக்கியிருந்தால் நிச்சயமாக குடியிருப்பு பகுதியில் பெரிய விளைவு அளித்திருக்கும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் இன்று அக்குடியிருப்பு மக்கள் நலமுடன் வாழ்கின்றனர்.  நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள், இம்மாதிரியான தீபரவல் உங்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டால், வேடிக்கை பார்க்காமல் உடனடியாக தீயணைப்பு இலாகாவிற்கு தகவல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மாநிலத்தின் தீயணைப்பு இலாகா. என்றுன் உங்களி