முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகத்திணைப் பாடல்களுக்கென தனிச் சிறப்புகள், கூறுகள்

கத்திணை என்பது தமிழ் இலக்கியங்களிலேயே உயரிய பிரிவாகும். அக ஒழுக்கத்தைப் பற்றி விவரிக்கக்கூடியது அகத்திணையியலாகும். அகம் என்பதற்கு உள்ளம், உறவு, மறைவு என்ற பொருள்படும். நம் சங்கக் கால தமிழிலக்கியங்களில் காணப்படும் காதல் வாழ்வு, உலக மக்கட்கெல்லாம் உரிய காதல் நெறியாகும்.

அகத்திணைக்கல்வி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்க வேண்டிய இன்றியமையாக் கல்வியாகும். தலைமக்கள் இருவர் தாமே எதிர்கொண்டு,காதல் கொண்டு பெறும் இன்பம், பிறருக்கு இன்னதென்று உணர்த்த முடியாததும் தாமே உணர்ந்து கொள்ளக்கூடியதும் அகமாகும். சங்க காலங்களில் நம் முன்னோர்கள் இல்லறவு வாழ்வு பூசலின்றி வாழ்ந்தனர் என்பதனை நம் அகத்திணைப் பாடல்களில் அறியலாம்.

அகத்திணை,புறத்திணைஎன பல ஒற்றுமை வேற்றுமைகள் கொண்டிருந்தாலும் புறத்திணையைக் காட்டிலும் அகத்திணை சிறபம்சங்கள் கொண்டதாக கருதப்படுவதாகநன்கு தெளிவாக விளங்குகிறது. புறத்திணைப் பாடல் அமைப்புகள் வீரம் மக்களுள் சிலருக்கே உரியதாகப் புலப்படுகிறது.

“நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே”- [புறம்.312]

அகத்திணைப் பாடல் பொருள் காமமோ காதலோ ஆண் பெண் என்ற பிரிவினைக் கொண்டே அஃறிணை உயர்திணை உயிர்க்கெல்லாம்பொதுவாக அமைக்கப்பெற்றுள்ளது என்பதனை கீழ்காணும் பாடலில் தொல்காப்பியரே கூறுவது போன்று உடம்பொடு ஒட்டிய இயற்கையதாகும்.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (தொல்.1168)”

இயற்பெயர் சுட்டாமை

அகத்திணையில் வரும் தலைமகனாகக் குறிக்கப்படுவனை அவர்களின்பெயர்கள் சுட்டுவதில்லை. உதாரணம், நாடன், ஊரன், சேர்ப்பன் என்றப் பொதுப்பெயரால் சுட்டுவதே வழக்காகும். தனி நபரின் இயற்பெயரைச் சுட்டுவது அகத்திணையின் மரபல்ல. அவ்வாறாகச் சுட்டப்பட்டால் அது அகத்திணையன்றி வாழ்க்கை வரலாறாக மாறிவிடும். அதுமட்டுமின்றி அந்நிகழ்வில் பெயரைக் குறிப்பிட்டால் சமுதாயத்தில் சிக்கல்கள் தோன்றக்கூடும். அகப்பொருள் இலக்கியம் குடும்ப இலக்கியமாகும்.

வெளிப்பாடு உத்திகள்

கவிஞன் தன் ஆளுமையால் பொருள் புலப்பாட்டிற்காகப் பல உத்திகளைக் கையாளுகிறான். அவற்றை இலக்கிய உத்திகள் என குறிப்ப்டுகின்றோம். தொல்காப்பியர் அகப் பொருளுக்குரிய உத்திகளாகக் குறிப்பு பொருண்மையில் அமைந்த உள்ளூறை, இறைச்சி என இரண்டினைச் சுட்டுகின்றார்.

திணை

தொல்காப்பியம், கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை,பெருந்திணை என ஏழு திணைகளைக் குறிக்கப்படுகிறன. அகப்பாடல்கள் முதல், கரு, உரி என்னும் மூன்று பொருண்மைகளை உடையன. முதற்பொருள் நிலம், பொழுது என்ற இரு பிரிவுகளை உடையது. கருப்பொருளில் தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி போன்றவை அடங்கும். உரிப்பொருள் ஒழுக்கம் பற்றியதாகும்.

தொல்காப்பியம் அகத்திணை ஏழு, புறத்திணை ஏழு என்ற கோட்பாட்டினைக் கொண்டுள்ளன. எனவே அகத்தோடு புறத்தை இணைத்துக் காட்டுகின்றது.

“அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் 
புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின் 
வெட்சி தானே குறிஞ்சியது புறனே 
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே” (தொல்.1002)

என அகத்திணையோடு பொருந்தி வருவதாகப் புறத்திணைக்கு இலக்கணம் கூறுகின்றது.

திணையுணரும் முறை

முதல், கரு, உரி ஆகிய மூன்றும் இணைந்ததை திணை என்போம். ஆனாலும் எல்லாப் பாடல்களிலும் முப்பொருளும் இணைந்து வராது. சில பாடல்களில் முதல், கரு,உரி ஆகிய மூன்றும், சில பாடல்களில் முதலும் உரியும், சில பாடல்களில் கருவும் உரியும், சில பாடல்களில் உரிப்பொருள் மட்டும் அமைந்து வரும். உரிப்பொருள் பாவின் உயிர்ப்பொருள் என்பதால் உரிப் பொருளின்றிப் பாடல் அமைவதே அகப்பொருள் என்கிறார் தொல்காப்பியர்.

கைகோள்

கைக்கொள்ளக்கூடிய ஒழுக்கம் கைகொள் ஆகும். அதாவது கடைப்பிடிக்கக்கூடிய வரைமுறையாகும். அளவில்லாத இன்பத்தை உடைய அன்பின் ஐந்திணைகள் பின்பற்றக்கூடிய ஒழுக்கம், களவு, கற்பு என இருவகைப்படும். திருமணத்திற்கு முந்தைய தலைமக்களது காதல் உறவு களவு எனப்படும். திருமணத்திற்குப் பிந்திய உறவு கற்பு என வழங்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் முப்பத்திரண்டு

அகத்திணைப் பாடல்கள்வழி அன்றைய வாழ்வியல் கூறுகள்

முன்னுரை :  'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு' என்று கூறும் நாமக்கல் கவிஞர் வரிகளில் உள்ள உண்மைத் தன்மை அகிலத்தோரால் போற்றப்படுகிறது. இதனையே தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. சிற்பம், கட்டிடக்கலை, போர், இசை, கனிமவளம், மருத்துவம் என அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவன் தமிழன். அதற்குமட்டுமல்ல பலமணம் செய்து கொண்டு திருமணம் என்று அவ்வுறவைக் கொச்சைப் படுத்தும் மனிதர்களுக்கிடையே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னத கோட்பாட்டோடு வாழ்ந்து குடும்ப வாழ்வியலுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான் அதனையே சங்க இலக்கிய நூல்களும் இயம்புகின்றன. இல்லற வாழ்வியலை அகத்திணை என்று பெயரிட்டு அதற்கென இலக்கணங்களையும் வகுத்துள்ளான். அதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  அகத்திணை : நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையே சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியங்கள் அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டு வகையாக வகுத்துள்ளது. இதில் புறவாழ்வு என்பது தலைவன் மேற்கொள்ளும் போர் சிறப்பு பற்றியதாகும். ஆனால் அகவாழ்வு என்பது ஓர் ஆணும் பெண்ணும் கண்களால் காதல