முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிரம்பான் 2 குடியிருப்பு பகுதியில் தீ

சிரம்பான்-20-பிப்ரவரி.
சிரம்பான் 2 குடியிருப்பு பகுதியில் தீ

கடந்த இரண்டு மாதமாக சிரம்பானில் கடும் வெப்பத்தில் தள்ளப்பட்டது. தட்ப வெப்பநிலை மாற்றத்தனால், மழையே இல்லாம போனது. இச்சம்பவம் தொடர்ந்து இன்று சிரம்பான் 2 குடியிருப்பு பகுதியில் வெப்பத்தின் காரணமாக தானாகவே சிறு காடு பகுதியில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இங்கு வாழும் குடியிருப்புவாசிகள் உடனே தீயணைப்பு வீரர்களுக்கு செய்தி வழங்கி, தீயை அணைக்க முயன்றனர். கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாம் முறையாகும். இங்கு வாழும் குடியிருப்புவாசிகள் பயந்த ஒரே காரணம் தீ ஏற்பட்ட பகுதியில் மின்சாரக்கூடம் உள்ளது. பற்றி எரிந்த தீ அக்கூடத்தை தாக்கியிருந்தால் நிச்சயமாக குடியிருப்பு பகுதியில் பெரிய விளைவு அளித்திருக்கும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் இன்று அக்குடியிருப்பு மக்கள் நலமுடன் வாழ்கின்றனர். 


நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள், இம்மாதிரியான தீபரவல் உங்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டால், வேடிக்கை பார்க்காமல் உடனடியாக தீயணைப்பு இலாகாவிற்கு தகவல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் மாநிலத்தின் தீயணைப்பு இலாகா.




என்றுன் உங்களின் நலன் விரும்பும்

தனேஷ் பாலகிருஷ்ணன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் ம...

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம...

அகத்திணைப் பாடல்களுக்கென தனிச் சிறப்புகள், கூறுகள்

அ கத்திணை என்பது தமிழ் இலக்கியங்களிலேயே உயரிய பிரிவாகும். அக ஒழுக்கத்தைப் பற்றி விவரிக்கக்கூடியது அகத்திணையியலாகும். அகம் என்பதற்கு உள்ளம், உறவு, மறைவு என்ற பொருள்படும். நம் சங்கக் கால தமிழிலக்கியங்களில் காணப்படும் காதல் வாழ்வு, உலக மக்கட்கெல்லாம் உரிய காதல் நெறியாகும். அகத்திணைக்கல்வி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்க வேண்டிய இன்றியமையாக் கல்வியாகும். தலைமக்கள் இருவர் தாமே எதிர்கொண்டு,காதல் கொண்டு பெறும் இன்பம், பிறருக்கு இன்னதென்று உணர்த்த முடியாததும் தாமே உணர்ந்து கொள்ளக்கூடியதும் அகமாகும். சங்க காலங்களில் நம் முன்னோர்கள் இல்லறவு வாழ்வு பூசலின்றி வாழ்ந்தனர் என்பதனை நம் அகத்திணைப் பாடல்களில் அறியலாம். அகத்திணை,புறத்திணைஎன பல ஒற்றுமை வேற்றுமைகள் கொண்டிருந்தாலும் புறத்திணையைக் காட்டிலும் அகத்திணை சிறபம்சங்கள் கொண்டதாக கருதப்படுவதாகநன்கு தெளிவாக விளங்குகிறது. புறத்திணைப் பாடல் அமைப்புகள் வீரம் மக்களுள் சிலருக்கே உரியதாகப் புலப்படுகிறது. “நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே”- [புறம்.312] அகத்திணைப் பாடல் பொருள் காமமோ காதலோ ஆண் பெண் என்ற பிரிவினைக் கொண்டே அஃறிணை உயர்திணை உயிர்க்கெல்லாம...