முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கியப் பயணம்-1

மீண்டும் என்னை எழுதத் தூண்டியப் புத்தகம்.
அண்ணன் ம.நவீன் எழுத்துகளில் மூழ்கும் போது, எனக்குள் இருக்கும் இந்த எழுத்துத் திறமையை முதல் முதலில் எனக்கே சுட்டிக்காட்டி என்னை ஒரு சிறுகதைப்போட்டியில் எழுத வைத்த அண்ணன் பாலமுருகன் அவ்ர்கள் என் நினைவில் வருகிறார்.

நன்கு  நினைவில் பதிந்த ஒரு காட்சி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அண்ணன் பாலமுருகன் நன்கு பரிட்சயமானதால் அவ்வப்போது என் அறைக்கு வருவார், இலக்கியக் கருத்துகளைப் பேசுவார், அதே நேரத்தில் அவர் எழுதிய சிறுகதைகளை வாசிப்பதற்காக என்னிடம் வழங்கியுள்ளார். என்னிடம் அவர் ஏன் இதனை எல்லாம் கொடுக்கிறார் என்பதனை என் சிற்றறிவுக்கு எட்டவில்லை அந்த நேரத்தில். ஆனால், என்னிடம் மொழி மட்டுமில்லை சமயச் சார்ந்த விசயங்களையும் கலந்துரையாடுவார். அவ்வப்போது "தனேஷ், நீங்களும் எழுதலாமே, முயற்சித்துப் பாருங்களேன்" என்பார். மனதிற்குள்ளே நான் முணுமுணுத்துக் கொண்டு, இவருக்கு வேலையே இல்லையா என்ற நினைப்பு வந்ததுண்டு. இருப்பினும், அவரிடம் "பிறகு பார்ப்போம்" என்பேன்". 

அவர் அவ்வப்போது என்னை தூண்டியதில் என மனதில் ஒரு உண்மைச் சம்பவம் உருவெடுத்து ஓடும். அதை எழுத்தாக அமைக்க ஆசைப்பட்டேன். எடுத்தேன் எழுதுகோலை, எழுத ஆரம்பித்தேன். அதுவே என் வாழ்க்கையில் நான் எழுதிய முதல் சிறுகதையாகும். 'கலியுகக் காதலா???'. வெற்றிக்கரமாக எழுதி முடித்தேன். எழுதிய அனுபவமில்லாததால் சற்று அதிகமாகவே தடுமாறினேன். எழுதியதைக் கொடுத்தேன் வாசிப்பதற்காக அண்ணன் பாலமுருகனிடம். அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. "தனேஷ் உனக்கு திறமை இருக்கு, இருப்பினும் நிறைய கதைகளை வாசி, சிறுகதையின் நடையைப் புரிந்து கொள். உன்னாலும் முடியும்" என்றார். 

அவர் சொன்ன வார்த்தையினாலே நான் இன்னும் அதிகமாக வாசிக்க ஆரம்பித்தேன். ஜெயகாந்தனின் சிற்பங்களை ஆழமாக வாசிக்க ஆரம்பித்தேன். சில நுணுக்கங்களைப் புரிந்து கொண்டேன். என்னுள் இருந்த ஆற்றலைத் தட்டிய எழுப்பின ஜெயகாந்தனின் சுவடிகள், புதுமைப்பித்தனின் எழுத்துகள், பா.அ.சிவம் எழுத்துகள், ம.நவீன் எழுத்துகள் மற்றும் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஐயா கம்பார் கனிமொழி அவர்களின் எழுத்து.

இன்றும் வாசிக்கின்றேன், வாசிப்பேன், வாசித்துக் கொண்டிருப்பேன்.

வாசி, 
நாளுமறிய வாசி, 
அவன் உன்னை 
வாசிப்பதற்கு முன்!
இங்ஙன்,

தனேஷ்@இளந்தமிழ்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் ம...

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம...

அகத்திணைப் பாடல்களுக்கென தனிச் சிறப்புகள், கூறுகள்

அ கத்திணை என்பது தமிழ் இலக்கியங்களிலேயே உயரிய பிரிவாகும். அக ஒழுக்கத்தைப் பற்றி விவரிக்கக்கூடியது அகத்திணையியலாகும். அகம் என்பதற்கு உள்ளம், உறவு, மறைவு என்ற பொருள்படும். நம் சங்கக் கால தமிழிலக்கியங்களில் காணப்படும் காதல் வாழ்வு, உலக மக்கட்கெல்லாம் உரிய காதல் நெறியாகும். அகத்திணைக்கல்வி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்க வேண்டிய இன்றியமையாக் கல்வியாகும். தலைமக்கள் இருவர் தாமே எதிர்கொண்டு,காதல் கொண்டு பெறும் இன்பம், பிறருக்கு இன்னதென்று உணர்த்த முடியாததும் தாமே உணர்ந்து கொள்ளக்கூடியதும் அகமாகும். சங்க காலங்களில் நம் முன்னோர்கள் இல்லறவு வாழ்வு பூசலின்றி வாழ்ந்தனர் என்பதனை நம் அகத்திணைப் பாடல்களில் அறியலாம். அகத்திணை,புறத்திணைஎன பல ஒற்றுமை வேற்றுமைகள் கொண்டிருந்தாலும் புறத்திணையைக் காட்டிலும் அகத்திணை சிறபம்சங்கள் கொண்டதாக கருதப்படுவதாகநன்கு தெளிவாக விளங்குகிறது. புறத்திணைப் பாடல் அமைப்புகள் வீரம் மக்களுள் சிலருக்கே உரியதாகப் புலப்படுகிறது. “நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே”- [புறம்.312] அகத்திணைப் பாடல் பொருள் காமமோ காதலோ ஆண் பெண் என்ற பிரிவினைக் கொண்டே அஃறிணை உயர்திணை உயிர்க்கெல்லாம...