முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபாவளி பரிசு: இந்திய ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழ் மலர் நாளிதழில் வெளியேறிய செய்திச் சுருள்..
தமிழ் மலர் நாளிதழில் பிரசுரமான செய்தி ஒன்றுயொட்டி முகநூல் நண்பரும் சாகோதரியுமான செல்வி உதயகுமாரின் கருத்து என்னவென்றால் "என் கருத்து என்னவென்றால் மலாய்க்காரர்களைக் குறை சொல்வதை விடுத்து முதலில் நம் ஆட்களைக் கேள்வி கேட்கவேண்டும்... தமிழ்ப்பள்ளிகளோடு தொடர்புடைய பல முக்கிய போட்டிகளே தீபாவளி,விநாயகர் சதுர்த்தி போன்ற நமக்கு முக்கியமான தினங்களில்தான் நடத்தப்படுகின்றன..இன்னும் பல விசயங்கள் உண்டு..ஏன் தீபாவளி நெருங்கும் இந்த வாரத்தில் கூட மதிய வேளைகளில் நிகழ்வுகள் உண்டு..தீபாவளி வாரத்திலேயே பள்ளிகளில் பரிசளிப்பு உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகள் உண்டு. 

இதையெல்லாம் மலாய்க்காரர்கள் ஏற்பாடு செய்யவில்லை. நம்மவர்கள்தான்.நோன்புப் பெருநாள்,சீனப்புத்தாண்டுக்கு ஒருவாரம் விடுப்பு எடுக்கலாம் என அரசாங்கம் சொன்னாலும் தமிழ்ப்பள்ளிகள் ஒருநாள் விடுமுறையோடு பள்ளியைத் தொடக்கிவிடும்.பிறகு மற்ற இனத்தவர்கள் விடுமுறையை ஈடுகட்டும் தினத்தில் நம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்.நாம் இவ்வாறு செய்வதால் பிற இனத்தவர்கள் என்ன செய்வார்கள்?அட இந்தியர்கள் அவர்கள் பெருநாளை எல்லாம் விட்டுவிட்டு வேலை செய்வார்கள்.அவர்களுக்கு ஒருநாள் விடுப்பு மட்டும் போதும்.நாமும் அந்த மாதிரி நாளில் சில நிகழ்வுகளை நடத்தலாம் என்றுதான் நினைப்பார்கள்.கடமை உணர்வு அதிகம் இருக்கலாம் தப்பில்லை.ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் அளவு உண்டு.இந்த மாதிரி சமயங்களில் பிள்ளைகளும் பள்ளிக்கு வருவதை விரும்பாமல் மட்டம் போடுவார்கள்.ஓரிரு பிள்ளைகளுக்கு பள்ளி நடத்தினால் போதுமா? இதையெல்லாம் கேட்டால் வாய் அதிகம் என்பார்கள்.பள்ளியை எதிர்க்கிறோம் என்பார்கள்.

இந்த மாதிரி இருப்பதால்தான் மற்ற இனத்தவர்களும் நம் முக்கிய பண்டிகைகளில் கைவைக்கிறார்கள்.இப்போது சொல்லுங்கள் அவர்கள் அப்படி செய்ய நாம்தானே காரணம்?நாம் கோடு போடுகிறோம்.அவர்கள் ரோடு போடுகிறார்கள்.தீபாவளி எப்போது வரும் என முன்கூட்டியே தெரியும்.ஏன் எந்தத் தரப்பும் முயற்சி எடுத்து தீபாவளிக்கு முன்னமே சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து ஈடுகட்டிவிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரம் விடுப்பு கொடுக்கவில்லை?பிள்ளைகளுக்குதானே பண்டிகை கொண்டாட்டம்?வெளியூருக்குச் செல்லும் ஆசிரியர்களும் இருப்பார்களே?அதேமாதிரி முன்கூட்டியே நாள்காட்டியில் திகதிகளைச் சரிபார்த்து தீபாவளி மாதத்தில் எந்தப் பள்ளி நிகழ்வுகளும் இருக்காமல் பார்த்து அட்டவணை போடலாமே?மலாய்க்காரர்கள் நோன்பு மாதத்தில் எல்லாவற்றையும் ரத்து செய்கிறார்கள்தானே?நாமும் சில விசயங்களை சீர்தூக்கிப் பார்க்கலாமே? 

என் கருத்து தனிப்பட்ட கருத்துதான்..சரியாகதான் இருக்கவேண்டும் என்றில்லை..உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதையும் மதிப்பேன்..முதலில் நாம் நமது அடையாளங்களை இழக்காமல் இருப்போம்.முதலில் நாம் நம் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்கலாம்.பிறகு மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? இது குறித்து விரைவில் ஒரு முழுமையான கட்டுரை வரைவேன்."

சகோதரர்களே, நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்???

கருத்து பகிர்வு,

தனேஷ் பாலகிருஷ்ணன்
மின்கல்வி நிபுணர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் முப்பத்திரண்டு

அகத்திணைப் பாடல்கள்வழி அன்றைய வாழ்வியல் கூறுகள்

முன்னுரை :  'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு' என்று கூறும் நாமக்கல் கவிஞர் வரிகளில் உள்ள உண்மைத் தன்மை அகிலத்தோரால் போற்றப்படுகிறது. இதனையே தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. சிற்பம், கட்டிடக்கலை, போர், இசை, கனிமவளம், மருத்துவம் என அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவன் தமிழன். அதற்குமட்டுமல்ல பலமணம் செய்து கொண்டு திருமணம் என்று அவ்வுறவைக் கொச்சைப் படுத்தும் மனிதர்களுக்கிடையே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னத கோட்பாட்டோடு வாழ்ந்து குடும்ப வாழ்வியலுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான் அதனையே சங்க இலக்கிய நூல்களும் இயம்புகின்றன. இல்லற வாழ்வியலை அகத்திணை என்று பெயரிட்டு அதற்கென இலக்கணங்களையும் வகுத்துள்ளான். அதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  அகத்திணை : நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையே சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியங்கள் அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டு வகையாக வகுத்துள்ளது. இதில் புறவாழ்வு என்பது தலைவன் மேற்கொள்ளும் போர் சிறப்பு பற்றியதாகும். ஆனால் அகவாழ்வு என்பது ஓர் ஆணும் பெண்ணும் கண்களால் காதல