முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாய்மையின் புனிதத்தைக் கொச்சைப்படுத்திய வல்லினம் ஆசிரியர்.....


"கழிவறையும், பழிவாங்கும் முறையும்" எனும் சிறுகதை தமிழ் ஆர்வாலர்களின் மத்தியிலும் சரி சமயம், மதம் சார்ந்த அமைப்பிலும் சரி இன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தன் தவற்றை உணர்ந்து தயாஜி மன்னிப்புக் கோரி இருக்கிறார்.

தமிழ் மலர் 06/12/2013


இருப்பினும் இன்று பெரும் சர்ச்சையாக இருப்பது தயாஜி எழுத்து மட்டுமில்லை, அதனை ஆதரித்து விமர்சனம் வழங்கிய வல்லினம் ஆசிரியர் ம.நவீன் "தாய்மை என்பது புனிதமா?" எனும் கேள்வியே வாசகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான வினாக்களைத் தொடுக்கும் முன் ஆசிரியர் கொஞ்சம் நிதானத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும். அறிவிழந்து தாய்மை விவாதித்ததில் வன்மையாக கண்டிக்கிறேன்.



வல்லினம் ஆசிரியர் ம.நவீன்
வல்லினம் சிற்றிதழ் ஆசிரியருக்கு அறிவுறுத்து, வாழ்வியலில் எல்லோருக்கும் எல்லாமே சுலபமாக கிடைத்து விடுவதில்லை. பொருள் ,நோயற்ற வாழ்வு, புகழ் ஆயுள், ஆடம்பரம், பணம் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று தன்னை சுலபமாக நெருங்க விடாமல் தடைபண்ணுகிறது. ஆனால் வந்த துன்பத்தை துன்பமாகவே அனுபவிக்காமல் தடைகளை தாண்டி செல்ல முடிந்தவரை முயற்சி எடுப்பதுதான் ஆரோக்கியமான வாழ்வு. அதைப்போலவேதான் குழந்தைச்செல்வம். ஒரு தாய் குழந்தை சுமப்பது மட்டுமில்லாமல், தன் உயிரையும் பணயம் வைத்து 10மாதம் சுமந்து பெற்றெடுக்கிறாள். அத்தனை வலிகளையும், சுமைகளையும் தாண்டி ஒரு குழந்தையை பெற்றெடுப்பதனாலே அவள் அந்த புனிதத்தையடைகிறாள்.

எப்படி இதையெல்லாம் யோசிக்காமல், தாய்மையை கொச்சைப்படுத்த உங்கள் எண்ணத்தில் தோன்றியது என தெரியவில்லை. மேற்கத்திய உதாரணங்களைக் காட்டாமல், நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் நன்கறிந்து எழுதுங்கள். திரும்பவும் கூறுகிறேன், தளம் கிடைத்திருக்கு என்று எது வேண்டுமென்றாலும் எழுதலாம் என நினைக்காதீர்கள். இதையெல்லாம் கண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். 


மலேசியாவில் பிறந்து வளர்ந்த தாங்கள் தேசிய கோட்பாட்டினை நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன். இல்லையென்றால், முதலில் அதையாவது படித்து தெளிவடையுங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் '' என்பது நாட்டின் தேசிய கோட்பாடுகளில் தலையாயனது.

''சமூகம் '' சிறுபான்மையினர் எனினும் அவரவர் சமய வழிபாட்டுக்குச் சுதந்திரம் உண்டு. மரபுடன் சமரச சன்மார்க்கம் கண்ட பரம்பரை நம் இந்திய சமூகம். ''சநாதன தர்மம் " என்ற சிறப்பும் இந்து சமயத்திற்கு உண்டு.

"சிறப்புக்குரிய " சிறிய சமூகத்திற்க்கு உள்ள சமயச் சிறப்புக்கு தமிழன் ஆற்றும் ஆற்றக் கூடிய சாத்தியம் என்ன? இளையோர்களை எப்படி இணைக்கலாம்? அவர்களை சமயத்தின் பால் ஆர்வம் கொள்ளவது எப்படி ? இதனை காலத்தையொட்டிச் சிந்திக்க வேண்டும். அதனைவிடுத்து தமிழ் என்ற போர்வையில் ஆபாசக் கதைகளை தெய்வத்தோடு சேர்த்து எழுதக்கூடாது. குழந்தைகளின் மத்தியில் விசமங்களை விதைக்காமல், நல்ல கருத்துகளை விதைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

காலமெல்லாம் புத்தாக்கச் சிந்தனை எனக்கூறி தமிழோடு சமயத்தையும் அழித்து விடாமல்; 
தமிழ் இலக்கிய மரபுகளோடு நல்நெறியையும்; மலேசியா திருநாட்டில் நம்மையும் காத்து, நடப்பில் காலத்தையும் கணித்து வாழத்தெரிந்து செயல்பட வேண்டும். அதன் பின் நடைமுறைச் சாத்தியங்களை நன்கு ஆராய்ந்து மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சி நல்வழியில் காணவேண்டும் என்பதே எமது அவா !

ஆக்கம்,
தனேஷ்@தினகரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் ம...

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம...

அகத்திணைப் பாடல்களுக்கென தனிச் சிறப்புகள், கூறுகள்

அ கத்திணை என்பது தமிழ் இலக்கியங்களிலேயே உயரிய பிரிவாகும். அக ஒழுக்கத்தைப் பற்றி விவரிக்கக்கூடியது அகத்திணையியலாகும். அகம் என்பதற்கு உள்ளம், உறவு, மறைவு என்ற பொருள்படும். நம் சங்கக் கால தமிழிலக்கியங்களில் காணப்படும் காதல் வாழ்வு, உலக மக்கட்கெல்லாம் உரிய காதல் நெறியாகும். அகத்திணைக்கல்வி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்க வேண்டிய இன்றியமையாக் கல்வியாகும். தலைமக்கள் இருவர் தாமே எதிர்கொண்டு,காதல் கொண்டு பெறும் இன்பம், பிறருக்கு இன்னதென்று உணர்த்த முடியாததும் தாமே உணர்ந்து கொள்ளக்கூடியதும் அகமாகும். சங்க காலங்களில் நம் முன்னோர்கள் இல்லறவு வாழ்வு பூசலின்றி வாழ்ந்தனர் என்பதனை நம் அகத்திணைப் பாடல்களில் அறியலாம். அகத்திணை,புறத்திணைஎன பல ஒற்றுமை வேற்றுமைகள் கொண்டிருந்தாலும் புறத்திணையைக் காட்டிலும் அகத்திணை சிறபம்சங்கள் கொண்டதாக கருதப்படுவதாகநன்கு தெளிவாக விளங்குகிறது. புறத்திணைப் பாடல் அமைப்புகள் வீரம் மக்களுள் சிலருக்கே உரியதாகப் புலப்படுகிறது. “நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே”- [புறம்.312] அகத்திணைப் பாடல் பொருள் காமமோ காதலோ ஆண் பெண் என்ற பிரிவினைக் கொண்டே அஃறிணை உயர்திணை உயிர்க்கெல்லாம...