முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வல்லினம் நிலைப்பாடு என்ன?


தமிழ் மலர் நாளிதழ் 05/12/2013 - படம் 1
சமீபத்தில் தயாஜி கைவண்ணத்தில் மலர்ந்த "கழிப்பறையும், பழிவாங்கும் முறையும்" வல்லினத்தில் பிரசுரமாகியது. முழுவதையும் பொறுமையுடன் வாசித்தேன். என் வாசிப்பில் முழுக்க முழுக்க சிறுநீராகவே துர்நாற்றம் வீசியதே தவிர பொதிந்திருக்கும் இலக்கிய நயம் புலப்படவில்லை. நாட்டில் இளம் எழுத்தாளர்களில் நான் அதி மதிப்புக்குரியவராக அமைந்த அவரின் எழுத்து இன்று ஏன் இந்த நிலைப்பாடு எனக்கு தெரியவில்லை. அதையும் ஆதரித்து இன்று வல்லினம் ஆசிரியர் ம.நவீன் விவாதிப்பது முற்றிலும் வாசகராகிய எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

தமிழ் மலர் நாளிதழ் 05/12/2013 - படம் 2
ஆசிரியர் ம.நவீன் காதல் எனும் மாத சஞ்சிகை எழுதத் தொடங்கிய காலம் முதல் அவரின் எழுத்துகளை மட்டுமில்லாமல் வல்லினம் குழுமத்தின் எழுத்துகளைப் பின் தொடர்ந்து வருகிறேன். வல்லினம் பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்க தளத்தை உருவாக்கி தந்தனர். முற்போக்குச் சிந்தனையாளராகவும் திகழ்ந்தனர். ஆனால், இன்று வல்லினம் "மஞ்சள் பத்திரிக்கையே" மிஞ்சி விட்டனர். கதை முழுக்க முழுக்க ஆபாசமே. யாரோ ஏதோ மஞ்சள் தளத்தில் எழுயிருந்தால் பரவாயில்லை, வல்லினத்தில் பிரசுரித்திருப்பதில் தான் இங்கு வாசகர் மத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மலர் நாளிதழ் 05/12/2013 - படம் 3
அதுமட்டுமில்லாமல், வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கடப்பாடும் வல்லினம் ஆசிரியருக்கு உண்டு அதை நான் மறுக்கவில்லை. ஆனால், ஆசிரியர் பதிலளித்த முறை தவறே என கூறுகிறேன். வாசகர்களை மடையர்கள் எனக் கூறுவது, வாசகர்கள் விடும் குசுக்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது எனக் கூறுவது மரியாதையற்ற செயலாக கருதுகிறேன். இவரை போல் அகங்காரம் கொண்ட 100 பேர் உருவாகிவிட்டால் போதும் பிறகு நான் சொல்லவேண்டியதில்லை, உங்களுக்கெ தெரியும்.



ஆசிரியர் கவனத்திற்கு வாசகன் ஒருவன் இல்லையென்றால் உங்கள் எழுத்தை ஐந்தறிவு படைத்த மிருகம் கூட சீண்டாது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எப்படி ஒரு கதையை வெளியிடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறதோ, அதேபோன்று கேள்வி கேட்பதற்கும் எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்கு பதிலளிப்பதை விடுத்து மடையன், குசு என்று மிக மட்டமான வார்த்தைகளை வெளியிடுவது நன்றல்ல. நாளை இதை தான் சமுதாயம் பின்பற்றும்... பெரியார் கூறிய “வெங்காயம்” போல்....

தமிழ் மலர் நாளிதழ் 05/12/2013 - படம் 4
இந்தக் கதையை ஆதரித்து பேசுபவர் நீங்கள் ஒருவர் மட்டுமே என்பதனை மறந்து விடாதீர்கள். இதுவரை வல்லினம் குழுமத்திலிருந்து ஒருவரும் ஆதரித்து பேசியதாக எங்குமே நாங்கள் காணவில்லை. வல்லினம் குழுமத்தின் நிலைப்பாடுதான் என்ன?

படைப்பிலக்கியத்திற்கு வெற்றி என மார்தட்டிக் கொள்ளாமல், அமைதியான முறையில் சிந்தியுங்கள். மேற்கத்திய சிந்தனை நமது கலாச்சாரத்தோடு என்றும் இணையாது என்பதனை மறந்து விடாதீர்கள். வள்ளுவன் விட எந்த ஞானியும் பிறக்கவில்லை. நீங்கள் செய்யும் தவற்றிற்கு வள்ளுவன், ஔவை, ஆண்டாள் அவர்களை இழுக்காதீர்கள். உங்கள் நம்பிக்கை பற்றி யாரும் விமர்சிக்கவில்லை, அதே போல் மற்றவர்களின் நம்பிக்கைகளை விமர்சிப்பது உங்களுக்கு உரிமையில்லை என்பதனை தெரிவிக்கின்றேன். 

என்றும் அன்புடன்,
தனேஷ்@தினகரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் முப்பத்திரண்டு

அகத்திணைப் பாடல்கள்வழி அன்றைய வாழ்வியல் கூறுகள்

முன்னுரை :  'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு' என்று கூறும் நாமக்கல் கவிஞர் வரிகளில் உள்ள உண்மைத் தன்மை அகிலத்தோரால் போற்றப்படுகிறது. இதனையே தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. சிற்பம், கட்டிடக்கலை, போர், இசை, கனிமவளம், மருத்துவம் என அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவன் தமிழன். அதற்குமட்டுமல்ல பலமணம் செய்து கொண்டு திருமணம் என்று அவ்வுறவைக் கொச்சைப் படுத்தும் மனிதர்களுக்கிடையே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னத கோட்பாட்டோடு வாழ்ந்து குடும்ப வாழ்வியலுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான் அதனையே சங்க இலக்கிய நூல்களும் இயம்புகின்றன. இல்லற வாழ்வியலை அகத்திணை என்று பெயரிட்டு அதற்கென இலக்கணங்களையும் வகுத்துள்ளான். அதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  அகத்திணை : நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையே சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியங்கள் அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டு வகையாக வகுத்துள்ளது. இதில் புறவாழ்வு என்பது தலைவன் மேற்கொள்ளும் போர் சிறப்பு பற்றியதாகும். ஆனால் அகவாழ்வு என்பது ஓர் ஆணும் பெண்ணும் கண்களால் காதல